சோலை நகரத்து
பைங்கிளியே !
என்ன நினைத்து
உறங்கினாய்
விடிந்தால்
விடுமுறை...
விளையாடலாம்
என்றா !
மாமா, அண்ணா என்னும்
அன்போடு அழைத்தாயே !
ஒரு போதும் நினைத்தாயா ! அவர்கள்
உன் பிஞ்சு உடலை சிதைப்பார்கள் என்று !
நிம்மதியாக
துயில் கொள் !
நீ கொஞ்சி
விளையாடிய பொம்மைகளோடும்
உன் புத்தகப்
பையோடும் !...
கவலை கொள்ளாதே !
இனி வரும் ஒரு சில நாட்களுக்கு
எங்கள் கை
பேசியிலும்..
அண்டை வீட்டு
சுவரிலும்..
உன் சித்திரம்
மட்டும் பேசுமடி.. அதுவும்
உன் அடுத்த
சகோதரி சிதையும் வரை...
எங்கள் மீது
கோபம் கொள்ளாதே !ஏனெனில் எங்களை பிடித்திருப்பது மறதி எனும்மருந்தில்லா
நோயே!...
இப்படிக்கு உன் சகோதரி,
- நதியா